Search This Blog n

20 September 2013

சுவர் இடிந்து விழுந்து திருச்சியில் இருவர் பலி


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது, அப்பகுதிக்கு அருகே இருந்த ஒரு விடுதியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண் தொழிலாளர்கள் பலியாயினர்.

  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கல்லூரி இருக்கும் சாலையில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று காலை கட்டடத்துக்கு அடிக்கல் வைக்க பள்ளம் தோண்டும் பணியில் 11 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
 
 அப்போது, அவ்விடத்துக்கு அருகே இருந்த சுற்றுச் சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 5 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment