Search This Blog n

29 November 2014

நடந்து சென்ற 10 வயது சிறுவன் வெடிகுண்டு வெடித்து பலி

  மணிப்பூர் மாநிலத்தின் தவுபால் மாவட்டத்தின் உட்பகுதியில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுவன் பலியானான்.  தனது தாயுடன் ஒன்றாக சென்றிருந்த அச்சிறுவன் சாலையோரம் நின்று கொண்டு இருந்தான்.

அவனது தாய் கால்நடைகளுக்கு தேவையான புற்களை சேகரித்து கொண்டிருந்தார்.  இந்நிலையில், திடீரென வெடிகுண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான்.  வெடிகுண்டு சத்தம் கேட்டதை அடுத்து அந்த இடத்திற்கு சென்று சிறுவனின் தாயார் பார்த்துள்ளார்.

அசாம் துப்பாக்கி படை பிரிவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சென்று வரும் இந்த பகுதியில் தீவிரவாதிகள் அவர்களை தாக்கும் நோக்கத்துடன் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment