Search This Blog n

27 November 2014

புல்லட் ரயில்:டில்லி-சென்னைக்கு பணிகள் தீவிரம்

பீஜிங்:டில்லி-சென்னை இடையேயான புல்லட் ரயில் திட்ட பணிகளுக்காக இந்திய உயர்மட்டக்குழு சீனா சென்றிருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி,டில்லி-சென்னை இடையே புல்லட் ரெயில் இயக்குவது குறித்த திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிலையில், டில்லி-சென்னை இடையே புல்லட் ரயில் திட்டம் இயக்குவது திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான, திட்ட செயலாக்கம் குறித்த இலவச பயிற்சிக்கு சீனா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி இந்திய

ரெயில்வே அதிகாரிகள் 100 பேருக்கு பயிற்சி, தற்போதைய ரெயில் நிலையங்களை மறுமுன்னேற்றம் செய்தல், ரெயில்வே பல்கலைக்கழகம் நிறுவுதல் போன்றவற்றுக்கு சீனா உதவி செய்கிறது.இந்த பயிற்சிக்கான

திட்டங்களை வகுப்பதற்காக இந்திய ரெயில்வேயின் உயர்மட்ட அதிகாரிகள் சதீஷ் அக்னிகோத்ரி தலைமையில் சீனா சென்றுள்ளனர். அவர்கள் சீனாவின் அதிவேக ரயில் நிறுவன அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த திட்டத்துக்கான செயலாக்க பயிற்சியை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1 லட்சத்து 956 ஆயிரம் கோடி செலவாகும் என அந்நாட்டு பத்திரிகை தெரிவித்திருந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment