Search This Blog n

08 November 2014

திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தக் கோரி வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், ஆணின் திருமண வயதை 21ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும்
 என்றும் கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண வயதை அதிகரிப்பது போன்ற விவகாரம் அரசின் கொள்கை முடிவு என்று கூறிய நீதிபதி, திருமண வயதை உயர்த்தக்கோரிய வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.  

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment