Search This Blog n

27 December 2014

மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு

 ஒரு ரூபாய் நோட்டுகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவில் அச்சடிக்கப்பட்டு வெளியாக உள்ளன. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நோட்டின் மதிப்பை விட, அதனை அச்சடிக்க அதிகம் செலவாவதால், ஒரு ரூபாய் மற்றும் இரண்டு, 5 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது.
1994ஆம் ஆண்டில் ஒரு ரூபாய் அச்சடிக்கும் பணியை நிறுத்திய மத்திய அரசு, 1995ஆம் ஆண்டில் இரண்டு மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டது.
ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு, புதிய வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் இந்த ரூபாய் நோட்டு இருக்கும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment