Search This Blog n

23 December 2014

இந்தியா இலங்கை மீனவர்களை விடுவித்தது

கடந்த செப்டம்பர் 30ஆம் திகதியன்று இந்திய கரையோரப் படையினரால் கைது செய்யப்பட்ட 12 இலங்கையர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
தமிழக அரசாங்கம் விடுத்த பணிப்புரைக்கு இணங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இந்த விடுதலைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று சிரேஸ்ட நீதிவான் நீதிமன்றம் இந்த 12பேரையும் விடுவித்தது.
இவர்கள், கன்னியாகுமரி கடல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ரங்கா புத்தா மற்றும் சதீவ் புத்தா ஆகிய படகுகளில் சென்ற மீனவர்களே கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment