Search This Blog n

15 December 2014

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி மீனவர்கள் விரட்டியடிப்பு

இராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500 மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

நேற்று இரவு அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல்கள், இராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தன. அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி, மீனவர்கள் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். 

சில இலங்கை இராணுவத்தினர் தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசினார்கள். படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் தாக்கி சேதப்படுத்தினார்கள் என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது. 

இதனால் பயந்து போன இராமேசுவரம் மீனவர்கள், வலைகளை அப்படியே விட்டுவிட்டு, கரையை நோக்கி திரும்பினார்கள். இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கண்ணீர்மல்க கூறினர். 

இந்த தொடர் சம்பவத்தால் இராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment