Search This Blog n

15 December 2014

போர் விமானங்களில் விரைவில் பெண் பைலட்டுகள்:

 
எதிர்காலத்தில் இந்திய போர் விமானங்களில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்படுவார்கள் என விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.  இதுபற்றி அவர் கூறுகையில், ‘பெண்கள் விமானப்படையின் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். எதிர்காலத்தில் போர் விமானங்களில் பைலட்டுகளாகவும் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறேன். ஆயுதங்களை நவீனமாக்க இது உதவும். இது ஒரு சரியான முடிவு.என்றார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், உடல்ரீதியாக பெண்கள் போர் விமானங்களை ஓட்டுவதற்கு ஏற்றவர்கள் அல்ல. குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் போது அவர்கள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று விமானப்படை தளபதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment