Search This Blog n

07 December 2014

மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலம்

ராஜஸ்தானில் கட்டப்பஞ்சாயத்து உத்தரவின்படி 80 வயது மூதாட்டி ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு கழுதை மேல் ஊர்வலம் வரச்செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம், சவ்ஹானோன் கி கேமெரி கிராமத்தில் கடந்த வாரம் 80 வயது மூதாட்டி ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு கழுதை மேல் ஊர்வலம் வரச்செய்யப்பட்டுள்ளார். 80 வயதான மூதாட்டி குழந்தைகளை கொன்று திண்ணும் சூனியக்காரி என்று பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர் கட்டப்பஞ்சாயத்து நடத்தியவர்கள், மூதாட்டியை ஆடைகளை களையவைத்து, முகத்தில் கருப்பு வர்ணத்தை ஊற்றி, நிர்வாணமாக கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றிவர செய்துள்ளனர்.
கட்டப்பஞ்சாயத்தில் மூதாட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் யாராவது பேசினால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 37 வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டார். அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கிராமத்தில் சிறிய அளவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் என்னை அவமானப்படுத்தியுள்ளனர் என்று மூதாட்டி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கிராம பகுதிகளில் குறிப்பிட்ட சமூக கட்டப்பஞ்சாயத்து மட்டும் அவர்களது உத்தரவுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் அம்மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை கழுதைமேல் ஏற்றி கரியைப்பூசி நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment