Search This Blog n

21 March 2015

10 மீனவர்கள் மீனவர் பேச்சுவார்த்தைக்கு பயணம்???

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 10 மீனவ பிரதிநிதிகள் எதிர்வரும் திங்கட் கிழமை தமிழ்நாட்டுக்கு பயணிக்கின்றனர்.
அவர்களுடன் 5 மீன்பிடித்துறை அதிகாரிகளும் எதிர்வரும் திங்கட் கிழமை இந்த பேச்சுவார்த்தைக்காக சென்னை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தின்கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு தினங்களாக இந்தபேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையாகும்.
இந்த பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த போதும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் புதிய திகதி
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment