Search This Blog n

06 March 2015

விடுதலையான தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

.தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 19 மீனவர்கள் தென்ஆப்பிரிக்காவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 11 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்திய வெளியுறவு துறையின் நடவடிக்கையால் அவர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து விமானம் மூலமாக கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.

கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் மூலம் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தகவலை கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி தெரிவித்தார். அப்போது பாராளுமன்ற வெளியுறவு துறை கமிட்டி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் உடனிருந்தார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment