Search This Blog n

31 March 2015

ஏழுமலையான் கோவிலில் கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 
ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர்.
முன்னதாக திருமலைக்கு வந்த தமிழக கவர்னரை திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா, வரவேற்பு அதிகாரிகள் கோதண்டராமாராவ், தாமோதரம், அதிகாரி செல்வம் மற்றும் பலர்
 வரவேற்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment