Search This Blog n

28 March 2015

மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் சியோக்கி ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென ரெயிலின் சரக்கு பெட்டியில் தீ பிடித்தது. தொடர்ந்து தீ அருகே இருந்த மற்றொரு பெட்டியிலும் வேகமாக பரவியது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஏராளமான பயணிகளின்
 உடமைகள் எரிந்து நாசமாயின.
பின்னர் தீயில் எரிந்து நாசமான 2 பெட்டிகள் கழட்டிவிடப்பட்டு மீதமுள்ள பெட்டிகளுடன் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. இச்சம்பவத்தால் மும்பை வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment