Search This Blog n

01 March 2013

இந்தியாவின் புதிய பட்ஜெட் வாசிக்கையில்,,,


நாட்டின் புதிய பட்ஜெட் வெரும் கண்துடைப்பு என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்ற நிலையில் சில சுவாரஸ்யமான சம்பங்களும் அவையில் அரங்கேறியுள்ளன.
மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலியல் வன்கொடுமைக்கு பலியான டெல்லி மாணவியை நினைவுபடுத்தும் வகையில் நிர்பயா நிதியம் தொடங்குவதாக அறிவித்தபோது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி பெண் எம்.பி.கள் தங்களது வரவேற்பை தெரிவித்தனர்.
பெண்களுக்கென தனி வங்கிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் கைத்தட்டி ஆதரவைத் தெரிவித்தனர். நிதியமைச்சர் சிதம்பரம், தனது உரையின்போது முக்கிய தலைவர்களின் கருத்துகளை எடுத்துக் கூறினார்.
குறிப்பாக ஒரு நாட்டின் மிகப்பெரிய வளம், அந்நாட்டின் மக்கள்தான் என்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் ஜொசப் ஸ்டிக்லிட்ஸ்-ன் கூற்றை உதாரணப்படுத்தி பேசினார். மேலும் பட்ஜெட் உரையை முடிக்கும் முன்பு, திருக்குறளை வாசித்தார்.
‘‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்‘‘ இந்தக் குறளைச் சொல்லி ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
தெளிவுடன் செய்யத் துணிந்ததைக் காலம் நீட்டாமல், தளர்வின்றிச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள்.
உரையின் இறுதியாக, நீங்கள் விரும்பும் வலிமையும், உத்வேகமும் உங்களுக்குள்தான் இருக்கிறது, ஆகவே உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தையும் எடுத்துக்கூறினார் சிதம்பரம்.
ஒரு மணி நேரம் 47 நிமிடங்களுக்கு சிதம்பரம் பட்ஜெட் உரையாற்றிய போது அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மாடத்தில் இருந்து பார்வையிட்டனர். இதேவேளையில் பட்ஜெட் தாக்கலின்போது லல்லு பிரசாத் யாதவ் கொட்டாவி விட சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் தூங்கியே விட்டார்

0 கருத்துகள்:

Post a Comment