Search This Blog n

26 March 2013

மாவட்ட நீதிபதிக்கு தர்மஅடி கொடுத்த மனைவி மீது,,


சத்தீஸ்கரில் மாவட்ட நீதிபதியொருவர், அவர் மனைவி மற்றும் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மாவட்ட கோர்ட் நீதிபதியாக இருக்கும் அவினாஷ் திரிபாதி(வயது 33) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஆறு மாத குழந்தை உள்ளது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவினாஷ் மற்றும் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
நேற்று முன்தினம், தன் தாய் மற்றும் சகோதரியுடன் அவினாஷ் வீட்டிற்கு சென்ற பிரியங்கா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அவினாஷை, பிரியங்காவும் மற்றவர்களும் அடித்து உதைத்ததோடு உருட்டுக்கட்டையாலும் தாக்கினர்.
பின்பு பிரியங்காவின் சகோதரரும் தந்தையும் அவரை தாக்கினர்.இவர்கள் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவினாஷை, அவர் நண்பரான மற்றொரு நீதிபதி மொபைல் போனில் அழைத்தார். அந்த மொபைல் போன் அழைப்பை பிரியங்கா துண்டித்ததும் சந்தேகமடைந்த, அவினாஷின் நண்பர் பொலிசுடன் அங்கு சென்றார்.
அப்போது பலத்த காயங்களுடன் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த அவினாஷ், மீட்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவினாஷ் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி ஒருவர், அவர் மனைவி மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment