Search This Blog n

11 March 2013

கறுப்பு நிறமுடைய ஒரு அமெரிக்க இந்தியர் ஒமாபா பதவிக்கு???


அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு நான் நிற்கப்போகிறேன் என்று அமெரிக்க இந்தியர் பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியரும், லூசியானா கவர்னருமான பாபி ஜிண்டாலின்(வயது 41) சமயோசித புத்தியைப் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
எதிர் வரும் 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளாராக இரண்டாவது முறையாக கவர்னராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாபி ஜிண்டால் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பாபி ஜிண்டாலும் பேசினர்.
அப்போது பாபி ஜிண்டால், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நிற்க ஒரு மெலிந்த கருப்பு நிறத்திலானா ஒருவர் வந்துகொண்டிருக்கிறார் என்று கூறினார். இந்த பேச்சை கேட்ட அதிபர் ஒபாமா மனமுவந்து சிரித்தார். மேலும் வரும் மார்ச் மாதம் முதல் நிதிக்குறைப்பு செய்யவுள்ளதையும் நக்கலடித்து பாபி ஜிண்டால் பேசினார்.
இதுகுறித்து ஒபாமா கூறியதாவது: நான் ஒன்று சொல்லியாக வேண்டும். பாபி ஜிண்டால் ஒரு பயங்கரமான ஆளாக இருந்தார் என்று நான் நினைத்தேன்.
இன்று மாலை, பாபி ஜிண்டால் உண்மையிலேயே ஒரு நகைச்சுவையாளராகவும் நையாண்டிக்காரராகவும் இருக்கிறார் என்பது புலனாகிறது என்றார்.
 

0 கருத்துகள்:

Post a Comment