Search This Blog n

04 March 2013

பிரிவினர் மீது நடந்த குண்டுத் தாக்குதலில்


பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் நேற்று நடந்த பயங்கர குண்டு வீச்சு தாக்குதலில் 48 பேர் பலியாகியதோடு 140க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானில் வசிக்கும் ஷியா பிரிவினரை குறிவைத்து சமீப காலமாக கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஷியா பிரிவினர் மீது அவ்வப்போது போராளிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டதை தொடர்து இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க மறுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தாக்குதல்களை முறியடித்து ஷியா மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதல்களில் பல்வேறு போராளி முகாம்கள் அழிக்கப்பட்டன.

0 கருத்துகள்:

Post a Comment