Search This Blog n

24 March 2013

பூர்வகுடிகளின் நடைப்பயணம் வெற்றி


கனடாவில் ஐரோப்பியரின் வருகைக்கு முன் வாழ்ந்து வந்த பூர்வகுடிகள் ஏழு பேர், தங்களின் மொழி மற்றும் பண்பாட்டை வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய 1600 கிலோ மீற்றர் நடைபயணம் வரும் திங்களன்று நிறைவு பெறவுள்ளது.
ஜேம்ஸ் வளைகுடா பகுதியிலுள்ள கியுபெக் மாநிலத்தில் வாப்மாகூஸ்ட்யூ(Whapmagoostui) என்ற இடமே கிரீ மொழி பேசும் கனடாப் பழங்குடியினரின் தாயகமாகும்.
கிரீ மொழியினரின் தாயகமான வாப்மாகூஸ்ட்யூ என்ற இடத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி அன்று ஒரு வழிகாட்டியுடன் கூடிய ஆறு இளைஞர்கள் கொண்ட குழு தனது பண்பாட்டுப் பாதயாத்திரையை மக்கள் பயணம் என்ற பெயரில் தொடங்கியது.
தெரசா ஸ்பென்ஸி(Theresa Spence) என்பவர் “இனி சோம்பித் திரியோம்” என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம் ஃவாஸ்ட் நேசன்(First nations ) எனப்படும் பழங்குடிகளையும் க்ரீ மொழி பேசும் மக்களையும் ஒன்று சேர்த்தது.
இதே போல் மற்ற பழங்குடிகள் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உணரும் வகையில் இந்த நடைப்பயணத்தை கிரீ மொழியினர் நடத்தியுள்ளனர். ஆங்காங்கே பலர் இந்தப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தற்பொழுது கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிற்கு நடந்து வரும் மக்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இவர்கள் ஒட்டாவா சென்று சேர்ந்ததும் பாராளுமன்றம் இருக்கும் இடத்திற்கு சென்று ஊடகத்தினர் சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment