Search This Blog n

05 October 2014

போராட்டங்கள்: கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

வேலைநிறுத்தம் இல்லை; ஆனால் போராட்டங்கள்: கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேபிள் டிவி ஒளிபரப்பை இன்று சனிக்கிழமை நிறுத்தப் போவதாக முன்னர் போராட்ட அறிவிப்பைச் செய்திருந்தனர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்.
இந்நிலையில் தங்கள் போராட்டத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர். கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்தாமல், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் சங்கம் சார்பில் அக். 4 கேபிள் டிவி ஒளிபரப்பு ரத்து மற்றும் இதர போராட்டங்களும் அறிவித்து இருந்தோம். ஆனால் அரசுத் தரப்பு, செய்தி ஒளிபரப்புகளை தடை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. எனவே இதர போராட்டங்கள் நடைபெறும். கேபிள் டிவி ஒளிபரப்பு வழக்கம் போல இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

 

0 கருத்துகள்:

Post a Comment