Search This Blog n

22 October 2014

கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

 தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை, பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் மாலை முதல் விடுமுறை அளித்தது.
இந்நிலையில் இலங்கைக்கு அருகே வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசம் மற்றும் தூத்துக்குடியில் 9 செ.மீ, குன்னூரில் 8 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment