Search This Blog n

27 October 2014

அமைச்சர்கள் வழிபாடு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும்! -

 
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தார். அ.தி.மு.க பொது செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில்
போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் புனித தெராசா சர்ச் மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் உள்ளிட்ட தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் தாந்தோணிமலையில் உள்ள ஊரணி காளியம்மன் கோவிலில் 1008 லிட்டர் பாலில் அம்மனுக்கு சிறப்பு அபிN~கம் செய்தார்.
இதனை தொடர்ந்து மண்மங்கலம் முனியப்பன் கோவிலில் சிறப்பு அபிN~கமும், சின்னப்பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகையும் செய்தார். மேலும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் திருக்கோவிலில் குத்துவிளக்கு ப+ஜையும் மற்றும் சிறப்பு அபிN~கமும், பாலமலை முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜி மனமுருகி வேண்டிக்கொண்டார்.
நிகழ்ச்சியின்போது அ.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் காளியப்பன், பொருளாளர் முரளி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர கழக செயலாளர் கவுன்சிலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட கழக பொருப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment