Search This Blog n

28 October 2014

கடத்தப்படவிருந்த 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

 இராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட 50 கிலோ பதப்படுத்திய கடல் அட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மண்டபம் சேதுநகர் கடற்கரைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட பதப்படுத்திய கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர் இந்தக் கடலட்டைகள் இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது. பறிமுதல்செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபா என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment