Search This Blog n

05 October 2014

தமிழகம் முழுவதும் இன்று 6 ஆயிரம் தனியார் பஸ்கள் ஓடாது:

ஜெயலலிதாவுக்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று(ஞாயிற்றுக் கிழமை) 6 ஆயிரம் தனியார் பஸ்கள் ஓடாது என்று பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
விடுதலை செய்யக்கோரி போராட்டம்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயங்காது என்று பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் கே.தங்கராஜ் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
6 ஆயிரம் பஸ்கள் ஓடாது
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஒருமித்த ஆதரவை தெரிவிக்கும் வகையில் நாளை (இன்று-ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்களில் ஓடும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.
இந்த போராட்டத்தின் போது காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சாலைகளில் எந்த தனியார் பஸ்களும் ஓடாது.
உண்ணாவிரதம்
மேலும், ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் அமைதியான முறையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டமும் நடக்கிறது.
இதில் அனைத்து பஸ் உரிமையாளர்கள், டிரைவர் கள், கண்டக்டர்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 112 தனியார் பஸ்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படமாட்டாது என்று காஞ்சீபுரம் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment