Search This Blog n

21 October 2014

தீ விபத்து: பட்டாசு தொழிற்சாலையில் 10 பேர் பலி

  ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியானார்கள். தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தாக கூறப்படுகிறது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ மள மளவென தொழிற்சாலை முழுவதும் பரவியதாக தெரிகிறது.
இத்தீவிபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தொழிற்சாலையின் மற்ற பகுதிகளிலும் தீ வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகள் அப்பகுதி விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment