Search This Blog n

07 October 2014

இந்தியா போர் நிறுத்தத்தை மீறியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

 
பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலால் இந்திய தரப்பில் 5 அப்பாவிகள் பலியானார்கள். இந்நிலையில், இந்தியாதான் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக, ராஜ்ய வழிமுறை மூலம், தனது எதிர்ப்பை இந்தியாவிடம் பதிவு செய்துள்ளது. தனது படைகளை கட்டுப்படுத்தி வைக்குமாறு இந்தியாவை வற்புறுத்தி உள்ளது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலால், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானதாகவும், 3 பேர் காயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறுகிறது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment