Search This Blog n

25 October 2014

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர். தாளவாடி, கேர்மாளம், பவானி சாகர் உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம் பகுதியில் தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்கிறது.
 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடவள்ளி வேடர் காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 25) , சுரேந்திர பிரசாத் (23). இருவரும் உறவினர்கள். நேற்று இரவு நண்பர் ஒருவருடன் மோட் டார் சைக்கிளில் சினிமா பார்க்க சென்றனர். நள்ளிரவில் சினிமா முடிந்ததும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந் தனர்.
 சத்தியமங்கலம் கஸ்தூரி நகர் அருகே வந்த போது அங்குள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மோட்டார் சைக்கிளில் வந்த வினோத் உள்பட 3 பேரும், தரைப்பாலத்தை கடக்க முயன்றனர்.அப்போது காட்டாற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் வினோத், சுரேந்திர பிரசாத் மற்றும் நண்பர் ஆகிய 3 இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் தரைப்பால வெள்ளத்தில் கயிறு கட்டி தேட ஆரம்பித்தனர். கிராம மக்களும் உடல்களை தேடினர். இன்று அதிகாலையில்
 வினோத், சுரேந்திரபிரசாத் ஆகியோரது உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களுடன் சென்ற நண்பரின் உடல் கிடைக்க வில்லை. அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment