Search This Blog n

11 July 2013

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்: ??


 இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தொடர்ச்சியாக முயற்சி காரணமாகவே இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சேதுசமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு மட்டுமன்றி இந்தியாவிற்கே இந்தத் திட்டத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment