Search This Blog n

06 July 2013

அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த, குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிதை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன் போது 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமெனவும் குர்ஷித், பெசில் ராஜபக்ஷவிடம் கோரியிருந்தார்

0 கருத்துகள்:

Post a Comment