Search This Blog n

15 July 2013

இந்திய இளைஞர் சுட்டுக் கொலை,,


மலேசியாவில் மர்மநபர்களால் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் பென்னாங்க் மாகாணத்தை சேர்ந்த இந்திய வம்சாவழி இளைஞர் எம்.ரவீந்திரன்(வயது 19).
இவர் தனது சக நண்பர்களுடன் பட்டர்வொர்த் நகரில் உள்ள கோவில் வளாகத்தில் மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரவீந்திரன் இறந்தார்.
மேலும் உடன் நின்று கொண்டிருந்த 51 வயது முதியவர் ஒருவர், 18 வயது இளைஞர் ஆகிய இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

0 கருத்துகள்:

Post a Comment