Search This Blog n

30 July 2013

சுங்கத்தினரிடம் சிக்கினர்! தங்கம் கடத்தியவர்கள் ?


சென்னை சுங்க அதிகாரிகள் 2.5 கிலோகிராம் தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 14 பேரை கைது செய்துள்ளனர்.
இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து தங்க கட்டிகளை கடத்திக் கொண்டு வெவ்வேறு வானூர்திகளில் பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மற்றும் மதுரை போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலா வீசாக்களில் கொழும்பு, மலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.
அவர்களின் பலர் வழமையாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் என்றும் இந்தமுறை கடத்தப்பட்ட தங்க பொதிகளை தமிழகத்தில் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்க செல்ல முன்பதாகவே கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கடத்தல் ஒன்றுக்காக அவர்களுக்கு 5 ஆயிரம் தொடக்கம் 7 ஆயிரம் இந்திய ரூபாய்கள் வழங்கப்படுகின்றமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது

0 கருத்துகள்:

Post a Comment