Search This Blog n

10 July 2013

மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட்


பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்திற்கு எதிராக வதோதரா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் நடனமாட மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதற்காக அவருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டு இருந்தும், விழாவிற்கு வராமல் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளர் மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக வதேதரா நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்தார் மல்லிகா.
இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு ஆஜராகத் தவறினால் இந்திய தண்டனைச் சட்டம் 294ல் கீழ் கைது செய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment