Search This Blog n

21 July 2013

ஓ பிளேக்கின் பதவிக்கு இந்திய பெண் பரிந்துரை


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் தலைவராக நிஷா பிஸ்வாலை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பிஸ்வாலாவின் பரிந்துரை செனட் சபையினால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பணியகத்தின் தலைவராக இந்திய வம்சாவளி மற்றும் தெற்காசிய வலயத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பணியகம் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகள் மற்றும் இலங்கை, இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிஷா பிஸ்வால் தற்போது அமெரிக்க உதவித் திட்டத்தில் பிரதி நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
அவரது நியமனம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ரொபேட் ஓ பிளேக்கின் இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் பதவியை பிஸ்வால் வகிக்கக் கூடுமெனக எதிர்ப்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment