Search This Blog n

10 July 2013

ஜியா கான் தற்கொலையின் போது போதையில் இருந்தார்: திடுக்கிடும் தகவல்



இந்தியில் பிரபல நடிகை ஜியா கான் தற்கொலை செய்வதற்கு முன்பு மது அருந்தியிருந்தார் என்று பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜியா கான் கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் விசாரணை நடத்தியதில், அவரது மரணத்தில் காதலன் சூரஜ் பஞ்சோலிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தற்கொலையின் போது மது அருந்தியிருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன

0 கருத்துகள்:

Post a Comment