Search This Blog n

22 July 2013

எழுச்சியை நசுக்குவதற்கு பலிகடாவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் ?


முன்னால் உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் அதிதமான இந்து சமய பற்றுடையவர். சுமந்திரன் வரவோடு கிறிஸ்தவ மயப்பட முயற்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் வருகையால் சமநிலைப்படுத்தப்படுகிறது.

ஆயினும், மதத்தை முன் வைத்து தமிழ்த் தேசிய அரசியல் நகர்வதென்பது தமிழினதுக்கு பேராபத்தானதுடன், தமிழர் அரசியை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கி நகர்த்துகிறது. இதற்கு விக்னேஸ்வரன் துணைபோய்விடக்கூடாது.

நிற்க. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் பால் அக்கறையோடு செயற்பட்ட ஒருவர் அல்ல. சமாதான காலகட்டத்தில் கூட தமிழீழ நீதித்துறை அன்புரிமையோடு அவரை அணுகியபோது தமிழ் தேசியத்தை அவமதிக்கும் வகையில் அந்த அழைப்பை நிராகரித்தவர். அத்துடன், கொஐம்பை மையமாக கொண்ட மேட்டுக்குடி வர்க்கத்தை சார்ந்தவர். தjமிழர் தாயகத்தில வாழும் மக்களின் அவலங்களை நேரடியாக அனுபவித்திராதவர். இவரே, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபைக்கான தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என கொழும்பிலுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர் நியமிக்கப்பட்ட கையோடு இந்தியா ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கி வருகிறார். அதேவேளை, இந்தியா இவரது நியமளத்துக்கு பின்னால் உள்ளது என்ற செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளது. இவையெல்லாவற்றிற்கும் அப்பால், அமெரிக்காவையே அதிரவைத்த தமிழக மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் முகமாக இந்தியா ஊடகமொன்றிற்கு பேட்டி வழங்கியுள்ளார்.

இது, தமிழக மாணவர்களின் எழுச்சியை தடுக்க முடியாது மிரண்டு போன இந்தியாவின் மத்திய அரசுக்கு ஆதரவான முறையிலேயே அமையப்பெற்றுள்ளதால், கடந்த காலங்களில் திரு.விக்னேஸ்வரன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. ஆதலால், திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தனது அரசியல் நகர்வுகள் தொடர்பாக மீள்பரீசீலனை செய்ய வேண்டும் என தமிழகத்திலுள்ள மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கேட்டுக்கொள்கிறார்கள். அவர்களது வேண்டுகளுக் ஆதரவு அளிப்பதாக யாழ் பல்கலைக்கழக சமூகத்தை சார்ந்தவர்களும்  தெரிவித்துள்ளார்கள்

0 கருத்துகள்:

Post a Comment