Search This Blog n

26 July 2013

விவசாயிகளுக்கு நிவாரணமாக 2 ரூபாய்க்கு காசோலை


 டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ. 2, ரூ.3  மற்றும் ரூ.6 என்று எழுதப்பட்ட காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரியான பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயிகளின் பயிர்கள் கடும் சேதத்திற்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்திடம் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு ஒரு தொகையை தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரியான அரசானது விவசாயிகளுக்கு 2 ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கியுள்ளது. ஆனால் இந்த காசோலையானது எங்களது வருமையை அசிங்கப்படுத்துவது போன்று உள்ளது என கூறி விவசாயிகள் இந்த காசோலையினை நிராகரித்துவிட்டனர்.
இது குறித்து அரியான அமைச்சர் புபைன்டர் சிங் ஹோடா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எம்.ஏல்.ஏ.கள் மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து இந்த தொகையினை வழங்கியுள்ளோம் எனவும் இந்த இழப்பீட்டுத் தொகையானது சரியான தொகையாகும் என கூறியுள்ளார்.
அரியானா அரசாங்கம் கொடுத்துள்ள இந்த காசோலையானது எங்களை இழிவுபடுத்தும் செயல் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment