Search This Blog n

03 July 2013

பள்ளியில் குண்டு வெடித்து 20 மாணவர்கள் படுகாயம்!


ஓடிஸா மாநிலம் கட்டாக்கில் புறநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் வகுப்பறையில் திடீரென நடந்த பயங்கர குண்டு வெடிப்பால், 20 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
   கட்டாக்கில் புறநகர் பகுதியான அயத்பூரில் அரசு பள்ளி உள்ளது. அங்கு நேற்று காலை 9ம் வகுப்பறையில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 20 மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். மொத்தம் 58 மாணவர்கள் வகுப்பில் இருந்தனர்.
  குண்டு வெடித்ததில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மற்ற குப்புக்களில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால், பள்ளியில் பெரும் பதற்றம் நிலவியது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  அரசு பள்ளி வகுப்பறையில், நிகழ்ந்த குண்டுவெடிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது குறித்த உரிய விசாரணை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment