Search This Blog n

30 July 2013

! கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்


திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மீது, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நீது ஜெய்சிங்கானி(வயது 21) என்ற பெண் பணிபுரிந்து வருகிறார்.
இவரை தெருவோரத்தில் கடை நடத்தும் அமீத் தல்ரேஜா என்பவர் திருமணம் செய்ய விரும்பினார்.
இதனை நீதுவிடம் தெரிவிக்க, முதலில் சம்மதித்தவர் பின் வேண்டாம் என கூறினார்.
இதனால் கடும் கோபமடைந்த அமீத், நீது பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றினார்.
பலத்த காயமடைந்த நீது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தலைமறைவான அமீத்தை தேடி வருகின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment