Search This Blog n

03 July 2013

திரும்பும் தமிழர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்:


சவுதி அரேபியாவில் இருந்து திரும்பி வரும் தமிழர்களை வரவேற்று, அவர்களுக்கு தேவையான நிதி உதவி, கடன் உதவி செய்து, அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர பணி வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
  அவரது அறிக்கை: சவுதி அரேபியாவில், "நிதாகத்' என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் பெயரால், அந்நாட்டில் பணியாற்றி வந்த வெளிநாட்டினரை திரும்ப அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக 60 ஆயிரம் இந்தியர்கள், திரும்ப அனுப்பப்பட உள்ளனர். அவர்களில், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். "அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற மத்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவ முன் வரவேண்டும்' என, நான் விடுத்த அறிக்கையில் கூறியிருந்தேன். ஆனால், வேறு வழியின்றி, சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இந்தியர்களை, அங்கிருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிடும் வேலையில், இந்தியத் தூதரகம் கடந்த, இரண்டு மூன்று நாட்களாகத் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட இந்தியர்களுக்கு ஏற்கனவே இந்தியத் தூதரகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திரும்பி வரும் தமிழர்களை வரவேற்று, உடனடியாக தேவையான நிதி உதவி, கடன் உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்து, அவர்களுடைய குடும்பங்களை காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். அவர்களுக்குத் தமிழகத்திலேயே நிரந்தரப் பணி வழங்க வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment