Search This Blog n

18 July 2013

சென்னை மாணவி தற்கொலை !பிரித்தானியாவில்


இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த ஜார்ஜினா என்ற 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்த அவர் கடந்த வியாழக்கிழமை மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜார்ஜினாவின் உடலை பெறுவதற்காக தந்தை தாம்சன் மற்றும் உறவினர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.அங்கு அவரது உடலை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.
தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இதுகுறித்து லிவர்பூல் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.உயிரிழந்த மாணவி ஜார்ஜினாவின் தந்தை தாம்சன் சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment