Search This Blog n

17 February 2015

2013–ல் நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழல்

மத்திய பிரதேச மாநிலத்தில் 2013–ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலில் முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது என்றும், இதுதொடர்பான ஆவணத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
மருத்துவ ஊழல்
மத்திய பிரதேச மாநில தொழில் தேர்வு வாரியம் 2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் மருத்துவ ஊழியர்கள் தேர்வுக்கான நுழைவுத் தேர்வை நடத்தியது. இதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து, மாநில ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு அதிரடிப்படை விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை கண்காணித்து அறிக்கை கொடுக்க நீதிபதி சந்திரேஷ் பூஷண் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் ஐகோர்ட்டு அமைத்தது.
நேற்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் சிறப்பு விசாரணை குழு தலைவர் நீதிபதி சந்திரேஷ் பூஷணை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய்சிங், கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
சவுகான் பெயர் நீக்கம்
2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழலில் முதல்–மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையினர் ‘ஹார்டு டிஸ்க்’ (தகவல்களை சேகரித்து வைக்கும் மின்னணு கருவி) ஒன்றை கைப்பற்றினர். அந்த ஆவணத்தில் இருந்த சவுகான் பெயரை விசாரணை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். அவரது பெயருக்கு பதிலாக உமாபாரதி பெயரை சேர்த்துள்ளனர்.
இது மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ஊழல் மட்டுமல்ல, மாநில இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. இந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமானால் முதல்–மந்திரி சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்
ஊழலில் தொடர்புள்ள முதல்–மந்திரி மற்றும் அவரது பெயரை நீக்கிய விசாரணை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணை குழு தலைவரிடம் புகார் செய்துள்ளோம்.
மத்திய பிரதேசத்தில் 2013–ல் நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலில் முதல்–மந்திரி சவுகானுக்கு தொடர்பு காங்கிரஸ் புகார் மத்திய பிரதேச மாநிலத்தில் 2013–ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலில் முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது என்றும், இதுதொடர்பான ஆவணத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. மருத்துவ 
ஊழல் மத்திய பிரதேச மாநில தொழில் தேர்வு வாரியம் 2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் மருத்துவ ஊழியர்கள் தேர்வுக்கான நுழைவுத் தேர்வை நடத்தியது. இதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து, மாநில ஐகோர்ட்டு 
உத்தரவின்பேரில் சிறப்பு அதிரடிப்படை விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை கண்காணித்து அறிக்கை கொடுக்க நீதிபதி சந்திரேஷ் பூஷண் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் ஐகோர்ட்டு அமைத்தது. நேற்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் சிறப்பு விசாரணை குழு தலைவர் நீதிபதி சந்திரேஷ் பூஷணை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்
. பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய்சிங், கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:– சவுகான் பெயர் நீக்கம் 2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழலில் முதல்–மந்திரி
 சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது.
 இந்த ஊழல் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையினர் ‘ஹார்டு டிஸ்க்’ (தகவல்களை சேகரித்து வைக்கும் மின்னணு கருவி) ஒன்றை கைப்பற்றினர். அந்த ஆவணத்தில் இருந்த சவுகான் பெயரை விசாரணை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். அவரது பெயருக்கு பதிலாக உமாபாரதி பெயரை சேர்த்துள்ளனர். இது மத்திய பிரதேச மாநிலத்தின்
 மிகப்பெரிய ஊழல் மட்டுமல்ல, மாநில இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. இந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமானால் முதல்–மந்திரி சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நடவடிக்கை வேண்டும் ஊழலில் தொடர்புள்ள முதல்–மந்திரி மற்றும் அவரது பெயரை நீக்கிய விசாரணை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணை குழு தலைவரிடம் புகார் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment