Search This Blog n

27 February 2015

மக்கள் ஆலோசனை கேட்டு பட்ஜெட் தயாரிக்கப்படும் ???

டெல்லி சட்டசபையில் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
மக்களின் தேவைக்கு ஏற்றாற் போல பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டும். இதன்படி டெல்லி பட்ஜெட் தயாரிக்கும் 
பணிகள் தொடங்கி உள்ளது. முதல்முறையாக சோதனை முன்னோட்டமாக, 5 அல்லது 10 தொகுதிகளாக பிரித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி
 ஒதுக்கீடு செய்ய வேண்டும், 
எவ்வாறு செலவு செய்யப்பட வேண்டும் என்று மக்களிடம் கருத்து கேட்கப்படும். பின்னர் அதுகுறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் விவாதித்து, அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்கெடுக்க வைக்கப்படுகிறார்கள்

0 கருத்துகள்:

Post a Comment