Search This Blog n

19 February 2015

பூட்டை உடைத்து திருப்பதியில் மூலவர் தரிசனம்

  சிறிசேனாவுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவியுடன் சென்றார்.
அப்போது ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையில்
 உள்ள தங்க கதவை கோவில் ஊழியர்கள் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் மூலவரின் அறையை திறக்க முடியாத 
நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவில் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மூலவரின் தங்க கதவின் பூட்டை உடைத்து, கதவு திறக்கப்பட்டது.
அதன் பின்னர் கோவிலில் நடந்த சுப்ரபாதம் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா கலந்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தேவஸ்தான துணை செயல் அலுவலர் சின்னங்காரு ரமணா நிருபர்களிடம் கூறுகையில், ‘ஏழுமலையான் கோவிலில் நேற்று வழக்கம்போல் ஏகாந்தசேவை முடிந்து அதிகாலை கதவு அடைக்கப்பட்டது. பின்னர் 
அதிகாலை 2.15 மணி அளவில் அர்ச்சகர்கள் சுப்ரபாத சேவைக்காக கதவை திறக்க முயன்றபோது அதன் சாவி உடைந்தது. இருப்பினும் ஊழியர்கள விரைந்து வந்து பூட்டை அறுத்து திறந்தனர்.
 அதன்பிறகு வழக்கம்போல சுப்ரபாத சேவை நடந்தது. சன்னதியின் சாவி உடைந்ததால் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாது. எனவே, பக்தர்கள் அச்சமடைய வேண்டாம்’ என்றார். தரிசனத்துக்கு பின்னர் இலங்கை அதிபர் சிறிசேனா திருப்பதியில் இருந்து இலங்கை புறப்பட்டு சென்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment