Search This Blog n

21 February 2015

பன்றிகாய்ச்சல் கொசு கடிப்பதாலே பரவுகிறது மம்தா பானர்ஜி

பன்றிகாய்ச்சல் நாட்டையே அச்சுறித்தி வருகிறது இந்த பன்றி காய்சல் கொசு கடிப்பதாலே பன்றிகாய்ச்சல் வருகிறது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் விழிப்புணர்வு இல்லாததாலும் மத்திய அரசின் மெத்தன போக்காலும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

பன்றிகாய்ச்சல் குறித்து  மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பன்றிகாய்ச்சல் பெரும்பாலும் கொசுகடிப்பதால் தான் பரவுகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் தனிமைபடுத்தி அவர்களுக்கு படுக்கை வசதிகள் செய்து தரவேண்டும்.

இந்த நோயை விரட்ட முடியாது என்பது கிடையாது சரியான சிகிச்சை அளித்தால் இந்த நோயை முற்றிலும் விரட்டி விடலாம். என்று தெரிவித்தார்.
இந்தியாவில் குறைந்தது 670 பேர் பன்றிகாய்ச்சால் பலியாகி உள்ளனர்.மேலும் 10000 க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

பன்றிகாய்ச்சல் குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,  பன்றிகாய்சல் முதலில் பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. மனிதன் இடத்தில் இருந்து மனிதனுக்கு இது வேகமாக பரவுகிறது என்பதையும் தெரிவித்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment