Search This Blog n

18 February 2015

கிரண் பேடி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நலம் விசாரித்தார்

 டெல்லி சட்டசபை தேர்தரண் பேடி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நலம் விசாரித்தார்லில் அரவிந்த் கெஜ்ரிவாலும், கிரண் பேடியும் எதிர் எதிராக போட்டியிட்டனர். இருப்பினும், நேற்று 
டெல்லி போலீஸ் கமிஷனர் பீம் சைன் பஸ்சி அளித்த விருந்து நிகழ்ச்சியில், முதல்–மந்திரி கெஜ்ரிவாலும், கிரண் பேடியும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
 கிரண் பேடிக்கு கெஜ்ரிவால் வணக்கம் தெரிவித்தார். அதையடுத்து, இருவரும் சற்று நேரம் உரையாடினர்.
கெஜ்ரிவாலிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்த கிரண் பேடி, உடல்நிலையை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரும் 
கலந்து கொண்டனர். மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோரும் கெஜ்ரிவாலுடன் உரையாடினர். விருந்துக்கு வந்திருந்த பலரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment