This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 June 2016

பத்திரிக்கை அலுவலகத்தில் அறிய வகை ஆந்தை தஞ்சம் புகுந்தது.!

கரூர் நகரில் காட்டு பகுதியில் இருக்கும் அறிய வகை ஆந்தை நகர் பகுதிக்கு திசைமாறி வந்தது கண்டு பொதுமக்கள் அறிய வகை ஆந்தையை ஆர்வத்தோடு பார்த்து சென்றனர்.  கரூர் நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயனைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கரூர் தீயனைப்புத்துறையினர் ஆந்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஓப்படைத்தனர்.  பத்திரிக்கை  அலுவலகத்தில் ஆந்தை தஞ்சம் புகுந்ததை...

27 June 2016

எடையை குறைக்க முடியாமல் சிறு­நீ­ர­கத்தை விற்­க முனையும் தந்தை

குஜராத் மாநிலத்தில் 3 குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும்பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா . இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள். 4 வயதாகும் அனிஷா மெகாவின் எடை 56 கிலோ....

26 June 2016

அழுகிய நிலையில் பூட்டிய வீட்டில் 4 உடல்கள் மீட்பு!

இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில், பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சின்ராஜ் என்பவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம்  வீசியுள்ளது.  இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், சின்ராஜின் வீட்டின்‌ ஜன்னல் வழியாக ‌உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, அழுகிய நிலையில் 4 உடல்கள் கிடப்பது கண்டு, அதுகுறித்து பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து அங்கிருந்த உடல்களை...

21 June 2016

அண்ணன் தங்கையின் இழப்பை தாங்க முடியாமல் தீயில் குதித்தார்!

விழுப்புரம் மாவட்டத்தில் தங்கை இறந்த சோகம் தாங்கிகொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெங்கராம்பாளையத்தை சேர்ந்த குமார்(26) மற்றும் குமாரி ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள் ஆவார். தனது தங்கை குமாரி மீது குமார் அலாதி பிரியம் கொண்டவர் குமாரிக்கு திருமணம் ஆகி தனது கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார், இந்நிலையில் குமாரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதை அறிந்த குமார், அவரை பல மருத்துவர்களிடம்...

20 June 2016

அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி

இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மசோதாவை நிராகரித்த அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி அமெரிக்காவின் மாபெரும் ராணுவ கூட்டாளி என்று இந்தியாவை அங்கீகரிக்க மறுத்துவிட்ட அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி வழங்கிஉள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட இரு நாடுகளின் கூட்டறிக்கையில், இந்தியாவை அமெரிக்காவின் ‘மாபெரும் ராணுவ...

18 June 2016

விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ சிலை திறப்பு விழா

யாழில் இந்தியா நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானி யுமான டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ சிலை யாழ்.பொதுநூலகத்தில்  திறந்துவைக்கப்பட்டுள்ளது. 17.06.2016 ,அன்று  காலை 11.30 மணிக்கு அப்துல்கலாமின் திரு உருவ சிலையை இலங்கைக்கான இந்திய உயஸ்த்தானிகர் வை.கே சிங்ஹா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் இணைத்து திறந்துவைத்துள்ளனர். இந்நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொள்வார் என கூறப்பட்டிருந்த நிலையில்...

06 June 2016

பயங்கர விபத்து கிருஷ்ணகிரியில் 15 பேர் பலி!

கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வேலுமலையில், லொறி தனியார் பஸ் மற்றும் கார்  என்பன அடுத்தடுத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில்  லொறின் டயர் வெடித்ததால் லொறியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு...

05 June 2016

செதுக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை நீராட்டும் அதிசய நீர்

குற்றாலத்தில் அருவிகள் நீர் இன்றி காய்ந்து கிடக்கையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஒரேயொரு அம்மன் சிலைக்கு மட்டும் நீர் வருவது மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலமாகும். இந்த காலங்களில் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவது வழக்கம். ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து அருவிகளில் தண்ணீர்...

02 June 2016

நல்லசாமி சவால் கள்’ போதைப்பொருள் என நிரூபிக்கத் தயாரா?

கள் போதைப்பொருள் என்று நிரூபிப்போருக்கு 10 கோடி சன்மானம் அளிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி. நேற்று திருப்பூரில் பேட்டியளித்த அவர், ‘ கடந்த காலத்தில் கள்ளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஜெயலலிதா தற்போதைய தேர்தலில் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ‘கள்’ போதைப்பொருள் என சிலர் பேசிவருகிறார்கள். ‘கள்’ போதைப்பொருள்  என நிரூபிப்போருக்கு 10 கோடி சன்மானம் வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார். எல்லா கட்சிகளும்...

01 June 2016

மோடி. சுவிட்சர்லாந்து செல்கிறார் கருப்புப்பணத்தை மீட்பாரா?

பிரதமர் மோடி  வரும் 4ஆம் தேதி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணமாகிறார். முதலில் ஆப்கானிஸ்தான், கத்தார் நாடுகளுக்குச் செல்லும் மோடி  அங்கிருந்து  ஸ்விட்சர்லாந்து செல்கிறார். அங்கு அந்நாட்டு தலைவர்களை சந்திக்கிறார்.  பயணத்தின்போது மோடி கருப்புப்பணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு...