01 September 2014
காதல் வலைவீசி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள்
சீனாவில் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஹுபே (Hubei) மாகாணத்தில் பள்ளி மாணவிகள் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இணையதளத்தின் வாயிலாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகளை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் ஒரு கும்பல் சிக்கவைக்கின்றது.
இதன்பின் அந்தப் பெண்களை யிசாங் (Yazing) நகருக்கு வரவழைத்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் 14 முதல் 19 வயதுக்கு உள்பட்ட வயதினர் ஆவர்.
இந்நிலையில் பாலியல் தொழில் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர் என்றும் அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 30 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
வைகோ கண்டனம் ஆசிரியர் தினம் பெயர் மாற்றம்
ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தனது கடும் உழைப்பாலும், முயற்சியாலும் கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்தவர் சர்வபள்ளி திரு இராதாகிருஷ்ணன் ஆவார்.
அவர் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5 ஆம் நாள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
எதிர்கால இளம் தலைமுறையை பிஞ்சு பருவத்திலிருந்தே ஆற்றுப்படுத்தி, சமூகத்தில் உயர்ந்தவர்களாக ஏற்றம் பெற கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் திருநாளாக ஆசிரியர் தினம் 1962 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினம் அன்று பிரதமர் நரேந்திமோடி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்களிடம் இணையம் மூலம் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆனால், இந்நிகழ்ச்சியை வடிவமைத்துள்ள மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ஆசிரியர் தினத்தின் பெயரை “குருஉத்சவ்” என்று பெயர் மாற்றிக் கொண்டாட அறிவிப்பு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.
பல்வேறு தேசிய இனங்களின் மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வளர்த்தால்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
எனவே, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆசிரியர் தினத்தை “குருஉத்சவ்” என்று பெயர்மாற்றம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ சென்னை - 8 பொதுச் செயலாளர், 01.09.2014 மறுமலர்ச்சி தி.மு.க
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
31 August 2014
தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளர்கள்: வாய்ப்பு பெற்ற
நெல்லை, மகளிரணி நிர்வாகிகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக, அக்கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகள் உள்ளிட்ட காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (ஆக. 28) தொடங்கிய நிலையில், திருநெல்வேலி மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் கட்சியின் மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலர் இ.புவனேஸ்வரி (40) போட்டியிடுவார் என, அக்கட்சியின் பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். எம்.ஏ., எம்.பில். பயின்றுள்ள புவனேஸ்வரி திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறார். கட்சியில் மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலராக உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேயர் வேட்பாளராகத் தேர்வு பெற்றுள்ளது குறித்து புவனேஸ்வரி கூறுகையில், ஏழைத் தொண்டனும் அ.தி.மு.க.வில் பெரிய வாய்ப்பைப் பெற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த 1994ஆம் ஆண்டுமுதல் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக புவனேஸ்வரி பணியாற்றி வருகிறார். 2001ஆம் ஆண்டுமுதல் நிகழாண்டுவரை முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ரத்த தான முகாம் நடத்தியுள்ளார். வனத்தையும், விலங்குகளையும் பாதுகாக்கக் கோரி 2008ஆம் ஆண்டில் 6 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளார். இதுதவிர உழவாரப் பணிகள், அ.தி.மு.க.வின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். தூத்துக்குடி அந்தோனி கிரேசி: தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.பி.ஆர். அந்தோனி கிரேசி (54), மாவட்ட மகளிரணி இணைச் செயலராக உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளார். இவரது கணவர் ஏ.பி.ராஜேந்திரன் காலமாகிவிட்டார். கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் வகுப்பைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் வசித்து வருகிறார். 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். வகித்த பதவிகள்: மகளிரணி ஒன்றியச் செயலர் (1976), மாவட்ட மகளிரணித் தலைவி (1991), மாவட்ட மகளிரணிச் செயலர் (1999), 1996 முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாமன்ற உறுப்பினர். தற்போது மாநிலப் பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட மகளிரணி இணைச் செயலராக உள்ளார். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
30 August 2014
அரசியல் நெருக்கடி - ஆட்சியை ராணுவ தளபதி கைப்பற்றலாம்.
பாகிஸ்தானில், பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கானும், மதகுரு காதிரியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ராணுவம் நேற்று முயற்சிகளை தொடங்கியது. இதற்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நவாஸ் ஷெரீப் கூறுகையில், "தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண உதவுமாறு, ராணுவத்தை நான் கேட்கவில்லை" என்றார். மதகுரு காதிரி கூறுகையில், "பிரச்னைக்கு தீர்வு காண நவாஸ் ஷெரீப் தான் ராணுவத்தை அழைத்துள்ளார்" என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடிகளை பயன்படுத்தி, ஆட்சியை ராணுவ தளபதி கைப்பற்றலாம் என்று பேசப்படுகிறது.
ஜப்பான் பிரதமர்: பச்சை தேயிலை தேநீர் கொடுத்து மோடியை கவுரவிக்கவுள்ளார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக நாளை ஜப்பான் செல்கின்றார். அங்கு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே தலைநகர் டோக்கியோவில் வரும் திங்கட்கிழமை அன்று பாரம்பரிய தேநீர் விருந்தினை அளித்து மோடியை கவுரவிக்க இருக்கின்றார். முந்தைய காலத்தில் ஜப்பானியத் தலைவர்களால் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத் தேநீர் விருந்து தற்போது சிறப்பு விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
அபேயின் விருப்பத் தேர்வான பொடி செய்யப்பட்ட பச்சை தேயிலை பானம் மோடிக்கும் வழங்கப்படும் என்றும் அதுதவிர விருந்து நிகழ்ச்சி ஒன்றும் அவருக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றது என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன. மற்றொரு சிறப்பு சலுகையாக நாளை கியோட்டோவிற்கு வரும் நரேந்திர மோடியை ஷின்சோ அபே நேரில் சென்று சந்தித்து விருந்து ஒன்றினையும் அளிக்கின்றார்.
இந்த பயணம் குறித்து தான் மிகவும் ஆவலுடன் இருப்பதாக தனது இணையதளச் செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டிருந்த இந்தத் தகவலை மொழிபெயர்க்க ஜப்பானில் இருக்கும் தனது நண்பர்கள் உதவியதாகவும் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் மக்களிடம் ஜப்பான் மொழியில் பேசும்படி அங்குள்ள தனது நண்பர்கள் கேட்டுக்கொண்டதாக கூறிய மோடி, இந்த மொழிபெயர்ப்புக்கு உதவிய நண்பர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
29 August 2014
சர்ச்சையை காங்கிரசார் நிறுத்தவில்லை என்றால் ராஜீவ் காந்தி செக்ஸ் வீயோ வெளியிடுவோம்:
பாஜகவினர் மிரட்டல் கடந்த சில நாட்களாக மோடி திருமணமானவர் என்றும் தன் மனைவியை சரிவர காப்பாற்ற முடியாதவர் இந்திய பெண்களை எப்படி பாதுகாக்க போகிறார்? தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பாஜக ஆட்சிக்கு வருமேயானால் பெரும் கலாச்சார சீரழிவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையம் ஏற்படும் என காங்கிரஸ் கட்சியினர் மோடியை விமர்சித்தனர்.
இந்த பரப்புரைக்கு பாஜகவினர் கடும்கண்டனம் தெரிவித்திருந்தனர். மோடியின் திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் கேள்விகள் கேட்பதற்கு காங்கிரசில் உள்ள யாருக்குமே
தகுதி கிடையாது என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் காங்கிரசார் மீண்டும் மீண்டும் மோடி திருமண விஷயத்தை பெரிது படுத்தவே இணையாதள பாஜகவினர் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தார் இதுவரை பெண்களை எந்த அளவிற்கு போக பொருளாய் பயன்படுத்தியுள்ளனர் என தினமும் புது புது தகவல்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட 28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4.9.2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்றையதினம் திடீரென அறிவித்து இன்று தேர்தல் பற்றிய அந்தச் செய்தி நாளேடுகளில் வெளிவந்துள்ளது.
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல் துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும்.
அது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள் என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4.9.2014 என்கிற போது, மற்ற எதிர்க்கட்சிகள் அங்கே போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏன் என்றால், இடையில் 29, 30, 31 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள்.
உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இந்தப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்கனவே ஒரு முறை அதாவது கடந்த 6.8.2014 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது சட்ட மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், முதல்–அமைச்சரால் விதி 110ன் கீழ் அன்றாடம் ஓரிரு அறிவிப்புகளை வெளியிட்டு, பத்திரிகைகளில் அவர் பெயரில் அறிக்கை வெளி வர முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சி இடைத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, ஏடுகளிலும் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று அந்த அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற விநோதமும் அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்றது.
சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகுகூட, கடந்த ஒரு வார காலமாக அன்றாடம் முதல்–அமைச்சர் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாயில் பல திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். உதாரணமாக, தற்போது தேர்தல் நடைபெறவுள்ள கோவை மாநகராட்சிக்கு 2,377 கோடி ரூபாய்க்கான திட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளுக்கு 800 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமென்று முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதே மாதத்தில் பேரவையில் பல்வேறு மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த உள்ளாட்சித் துறைக்கான மானியங்கள் நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் துறையின் அமைச்சரோ, அல்லது முதல்–அமைச்சரோ இந்த அறிவிப்புகளை ஏன் செய்யவில்லை? மாறாக தற்போது அவசர அவசரமாக இத்தனை கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல்–அமைச்சர் அறிவிப்பது முறை தானா? இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டது தானா என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்.
அது மாத்திரமல்ல; இந்த மாதம் 6ஆம் தேதியன்று தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அந்த அறிவிப்பு ஏடுகளிலும் வெளிவந்து, பின்னர் அதே நாள் மாலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில், செப்டம்பர் 18ஆம் தேதியன்று தான் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தான் சொல்லப்பட்டது.
அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதே செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தான் இடைத் தேர்தல்கள் நடை பெறும் என்று, எதிர்க்கட்சிகளுக்கு எந்த விதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரோடு ஏற்பட்ட பிச்சினைகளைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்தக் கடலூர் நகராட்சிக்கு இடைத் தேர்தல் என்று அவர் ராஜினாமா செய்த மறுநாளே அறிவிக்கப்படுகிறது என்றால், இதைவிட வேறொரு கோமாளிக் கூத்து நடைபெற முடியுமா?
இன்னும் சொல்லப் போனால், 2011ஆம் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பதை பல உதாரணங்களின் மூலமாக அப்போதே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
இந்த நிலையில் ஆளுங்கட்சியின் அராஜகங்கள், பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிற விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாறுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரம் எதிர்க் கட்சிகளுக்கு வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றும், புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கின்றது.
Subscribe to:
Comments (Atom)



















