Search This Blog n

07 August 2013

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்?:


 
பாகிஸ்தான் நாட்டு தேசிய இராணுவ உடையில் வந்த துப்பாகி தாரிகளே இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.
 இவர்கள் இந்திய முஜாகிதீன் அமைப்பினர் எனவும் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் எனவும் வெவ்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று நள்ளிரவு, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் ஐந்து இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.
 இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தான் துனை தூதுவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஏ.கே.அந்?தோனி தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் தடைபட்டிருந்த இந்திய பாகிஸ்தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒரு பிரேரணை வெளியான ஒரு சில தினங்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
 இதேவேளை இத்தாக்குதலில் தாம் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு வெளியிட்டுள்ளது

 

0 கருத்துகள்:

Post a Comment