Search This Blog n

04 August 2013

இயக்குனர் சேரன் உருக்கமான பேட்டி ( காணொளி, இணைப்பு)



நான் காதலுக்கு எதிரானவன் அல்ல, அதேசயம் எனது மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் சேரன்.
பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி(வயது 20), தனது தந்தைக்கு எதிராக நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதில், சேரன் தன்னை காதலனிடம் இருந்து பிரிக்க பார்ப்பதாகவும், காதலனை கொல்ல நினைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சேரன் மகளின் காதலன் சந்துரு மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.
கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன், நான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல.
நானும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். நானும், என் மனைவியும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம்.
எனது மகள் தாமினி சந்துருவை காதலிப்பதாக கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன்.
ஆனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டு கொண்டேன்.
இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.
அப்போது அந்த பையன்(சந்துரு) தன்னை டார்ச்சர் செய்வதாகவும், பயமாக இருப்பதாகவும் எனது மகள் கூறினாள்.
உடனே உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த பையனை விட்டுவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன்.
இது தொடர்பாக 10 தினங்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தேன். இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.
எனது மகள் எனக்கு எதிராக நேற்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாள்.
ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது? நியாயமானதுதானே..? என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கமிஷனர் அலுவலகத்திற்கு சேரனுடன் இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், கரு. பழனியப்பன், நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment