Search This Blog n

28 August 2013

கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சரி செய்ய தயார்: மோடி


குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன.
சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை குஜராத் அரசு நிராகரித்து விட்டது.
இதனையடுத்து, சேதமடைந்த 535 மசூதிகளை அரசு செலவில் சரிபடுத்தி தரும்படி உத்தரவிட வேண்டும் எனறு அந்த கமிட்டி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த குஜராத் ஐகோர்ட், 'மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு ஆகும் செலவை குஜராத் அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
மக்களையும், மக்களின் சொத்துகளையும் பாதுகாக்க தவறிய மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, குஜராத் மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, 'மாநில அரசின் சார்பில் மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி அந்த திட்டம் என்ன? என்பதை கோர்ட்டுக்கும், குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டிக்கும் மாநில அரசு தெரிவிக்கும்' என கூறினார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து கூறிய அந்த கமிட்டியின் தலைவர் ஷகில் அகமத், 'அரசு என்ன திட்டத்தை அறிவிக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக பொறுத்திருப்போம். ஆனால், மோடியின் ஆட்சி மீது படிந்த கரையை நீக்குவதாகவே அந்த திட்டம் இருக்கும்' என்றார்.
2014 - பாராளுமன்ற தேர்தலையும், முஸ்லிம் ஓட்டுகளையும் மனதில் வைத்துதான் குஜராத் அரசு தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

0 கருத்துகள்:

Post a Comment