Search This Blog n

16 August 2013

வளர்ச்சி குறித்து விவாதிக்கத் தயாரா? :



மோடிக்கு திக்விஜய் சிங் சவால்  பிரதமரின் சுதந்திர தின உரையை விமர்சித்துள்ள குஜராத் மோடி, கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார்,'' என, மத்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் காட்டமாக கூறியுள்ளார்.
 மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்:நாட்டின் சுதந்திர தின விழாவில், நாட்டின் பெருமைகளையும், ஒற்றுமையையும் பற்றி பேசுவது தான், அரசியல் தலைவர்களுக்கு நல்லது. தனிப்பட்ட முறையில், பிரதமரை விமர்சிப்பது சிறந்தது அல்ல.
 நாட்டின் கதாநாயகனாக, தன்னை கருதி, கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார் மோடி.மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி:பிரதமர் குறித்து விமர்சித்துள்ள, குஜராத் முதல்வர் மோடி, தன் பேச்சை வாபஸ் பெற வேண்டும்.
 காங்., பொது செயலர் திக்விஜய் சிங்:பிரதமராகும் ஆசையில், வரம்பு மீறி பேசி வரும் குஜராத் முதல்வர் மோடி, நாட்டின் வளர்ச்சி குறித்து, என்னுடன் விவாதம் நடத்த தயாரா?
 மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல்:மோடியின் ஒவ்வொரு உரையிலும், தவறான தகவல்களும், புள்ளிவிவரங்களும் நிறைந்துள்ளன.
 இதற்கிடையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன் வீட்டில் சுதந்திர தின விழாவையொட்டி நடந்த விழாவில், கட்சியினர் மத்தியில் பேசுகையில், ""அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதற்கான தினம் இதுவல்ல. எதிர்கால திட்டங்கள் குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பா.ஜ., லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மோடியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ""பிரதமரின் உரையில், லால்பகதூர் சாஸ்திரி பற்றி குறிப்பிடாதது பற்றி, மோடி விமர்சித்தது சரிதான்,'' என்று குறிப்பிட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment